Thursday, April 10, 2014

தேவதை பெண் அவள் ......

ஓ தேவதை திருமகளே ......


உன்னை பார்த்ததும்
கண்ணில் உதித்த மின்னல்
உடலெங்கும் பரவி உயிருக்குள் பாயுதடி

சுதந்திர காற்றை விட
 உன் சுவாச காற்றே
 எனக்கு சொர்கமடி 

உயிர் போகும் தருவாயில்
 உன்னை பார்த்தால் போதும் 
மரணம் கூட எனக்கு மயிர் பீலியடி

முற்பிறவி பயன் தானோ
 உன்னை நன் கண்டு கொண்டேன்

என்ன தவம் செய்தேனோ
 உன் அழகை பார்பதற்கு 

உன்னை பார்த்த என் கண்கள்
 உறங்குவது எந்நாளோ

உன்னை பார்த்த நான்தான்
 உண்மையான பாக்கியவான்
 
என் உடம்பில் கண்கள் தான்
 கொடுத்து வைத்த நல் அவயம்